ஜி20 உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரை, இந்திய ஊடகங்களிடையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் கிழக்காசிய மையத்தைச் சேர்ந்த டாக்டர் அபிஷேக் சிங் நமது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் ஷிச்சின்பிங்கின் உரையை வெகுவாக பாராட்டினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய உரை தொலைநோக்கும் ஆழ்ந்த அர்த்தமும் உடையது. கூட்டுக் கட்டுமானம் மற்றும் பகிர்வு மூலம், ஒத்துழைப்பு மேடையை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்மொழிந்தார். இது தனது மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று அபிஷேக் சிங் தெரிவித்தார்.