ஷிச்சின்பிங் பேசுகையில், அண்டை நாடுகளான சீனாவும் தென் கொரியாவும் பரந்தளவில் பொது நலன்களைக் கொண்டுள்ளன. இருதரப்பும் கொரிய தீபகற்பத்தின் அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சிக்கு சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தென் கொரியாவில் தாட் ஏவுகணை எதிர்ப்பு தொகுதியைப் பரவல் செய்வதை சீனா எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாக் குன்ஹெய் கூறுகையில், சீனாவுடனான உறவுக்கு தென் கொரியா முக்கியத்துவம் அளிப்பதாகவும், குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி சீனாவுடன் தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.