பிரிட்டன் தலைமையமைச்சர் தெரேசா மே, ஜி20 உச்சி மாநாட்டின் போது, பிற தலைவர்களுடன், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு பன்னாடுகளுடனான புதிய வர்த்தக உடன்படிக்கை பற்றி விவாதித்தார். தாராள வர்த்தகத்தில் உலகின் தலைமையாக பிரிட்டன் மாறும் என்று அவர் வலியுறுத்தியதாக பிரிட்டன் தலைமையமைச்சர் இல்லம் 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இவ்வாண்டின் ஜூன் திங்கள், பொது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகத் தீர்மானிக்கப்பட்டது. விலகிய பிறகு, அதனுடன் வர்த்தக உறவிலும், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவிலும் பல்வேறு தரப்புகள் கவனம் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.