20 நாடுகள் குழுவின் ஹாங் சோ உச்சி மாநாடு, செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள் ஹாங் சோ நகரின் சர்வதேசப் பொருட்காட்சி மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், இவ்வுச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்கி, நிறைவு விழாவில் உரை நிகழ்த்தினார்.
இவ்வுச்சி மாநாட்டில் பல்வேறு உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆகியோர், உயர் பயனுள்ள உலகப் பொருளாதார மற்றும் நாணய ஆட்சிநிலை, வலிமையான சர்வதேச வர்த்தக மற்றும் முதலீடு முதலிய முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். காலநிலை மாற்றம், அகதிகள், உலகப் பொது சுகாதாரம் முதலிய உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இந்த பயணுள்ள விவாதங்களின் மூலம், பல்வேறு தரப்புகளின் முயற்சியில், ஜி20 உச்சி மாநாட்டில் பல முக்கிய பொது கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறைவு விழா உரையில் ஷி ச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.
முதலாவது, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி திசை தெளிவுபடுத்தி வழியை வரைவு செய்வது பற்றி நாங்கள் மனவுறுதி செய்ய வேண்டும்.
2ஆவது, அதிகரிப்பு வழிமுறையை புத்தாக்கம் செய்து, உலக பொருளாதாரத்துக்கு புதிய உந்து சக்தி அளித்திட நாங்கள் மனவுறுதி செய்ய வேண்டும்.
3ஆவது, முழு உலக பொருளாதார மற்றும் நாணய ஆட்சிமுறையை முழுமைப்படுத்தி, உலக பொருளாதாரத்தின் இடர்ப்பாட்டை தடுக்கும் ஆற்றலை உயர்த்துவது குறித்தும் நாங்கள் மனவுறுதி செய்ய வேண்டும்.
4ஆவது, சர்வதேச வர்த்தகத்தையும் முதலீட்டையும் மீண்டும் உயர்த்தி, திறந்த நிலை உலக பொருளாதாரத்தை உருவாக்குவது என நாங்கள் மனவுறுதி செய்ய வேண்டும்.
5ஆவது, ஜி20 ஒத்துழைப்பு சாதனைகள் உலகத்துக்கு நன்மை தரும் வகையில், அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் கூட்டு வளர்ச்சியை தூண்டுவது என நாங்கள் மனவுறுதி செய்ய வேண்டும்.
உலக பொருளாதார அதிகரிப்பு மற்றும் ஜி20ன் வளர்ச்சிக்கு பல்வேறு தரப்புகள் ஆற்றிய பங்கிற்கு ஷிச்சின்பீங் நன்றியை தெரிவித்தார். எமது கூட்டு முயற்சியுடன், ஜி20 ஹாங்சோ உச்சி மாநாடு அதிக சாதனைகளைப் பெற்று, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இம்மாநாடு புதிய துவக்கமாக, ஜி20, ஹாங்சோ நகரிலிருந்து மீண்டும் புறப்பட்டுச் செல்லும் என்பது உறுதி என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இம்மாநாட்டில் ஜி20 ஹாங்சோ உச்சி மாநாட்டு கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.