• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ஷிச்சின்பீங்
  2016-09-05 20:50:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி20 உச்சி மாநாடு 5ஆம் நாள் திங்கள்கிழமை நிறைவுப் பெற்ற பிறகு, சீன அரசுத் தலைவர் ஷி சின்பீங் ஹாங்சோவில் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் சந்தித்துப் பேசினார்.

நடப்பு உச்சி மாநாட்டில் எட்டப்பட்டுள்ள பொது கருத்துக்களையும் முக்கிய சாதனைகளையும், ஷி சின்பீங் செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்துள்ளார்.

உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் 20 குழுவின் மாற்றம் ஆகியவை எதிர்கொள்ளும் முக்கிய காலக்கட்டத்தில், ஹாங்சோ ஜி20 உச்சி மாநாடு, நடைபெற்றது. இது. பன்னாட்டுச் சமூகத்தில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வுச்சி மாநாட்டின் மீது பல்வேறு தரப்புகள் மிகுந்த எதிர்பார்ப்புகளையும் கொள்கின்றன. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், மாநாட்டில் அதிக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டிற்குப் பிறகு, பல்வேறு தரப்புகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து, பல்வேறு சாதனைகளை நடைமுறைப்படுத்தி, முன்னெடுக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040