5ஆம் நாள் நிறைவுற்ற ஜி20 உச்சி மாநாட்டில், 20 நாடுகள் குழுத் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கான அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 7 பகுதிகளைக் கொண்ட இந்த அறிக்கையில், 48 அம்சங்களைத் தவிர, ஜி20 புத்தாக்க வளர்ச்சிக்கான வரைபடம், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் ஜி20 செயல்திட்டம், கட்டமைப்பு சீர்திருத்தத்தை ஆழமாக்கும் நிகழ்ச்சி நிரல் ஆகிய மூன்று இணைப்பு ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.
முக்கிய பொருளாதாரச் சமூகங்கள் சமநிலையில் ஒத்துழைத்து கூட்டாக செயல்படுவது 20 நாடுகள் குழுவை நிறுவியதன் நோக்கமாகும். வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று ஜி20 அமைப்பின் தலைவர்கள் இவ்வறிக்கையில் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.