உலக வங்கியும் பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியும் 9ஆம் நாள், வாஷிங்டன் மாநகரில் புரிந்துணர்வு குறிப்பாணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. அடிப்படை வசதிக் கட்டுமானத்தினை வலுப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பது இதன் நோக்கமாகும்.
நிதி திரட்டல் திட்டப்பணிக்கான அறிவின் பரிமாற்றம், ஆலோசகர் சேவையை ஆய்வு செய்து, பணியாளர்களின் பரிமாற்றத்தை விரைவுப்படுத்துவது இக்குறிப்பாணையில் அடக்கம்.