• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலைப் பிரதிநிதிகளின் கூட்டம்
  2016-09-16 14:11:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசவை உறுப்பினர் யாங் சியே ச்சு 15ஆம் நாள் புது தில்லியில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலைப் பிரதிநிதிகளின் 6ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அக்டோபர் திங்கள் இந்தியாவின் கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 8ஆவது சந்திப்புக்கு அரசியல் ரீதியான ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. தவிர, இணையப் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பரந்துபட்ட பொது கருத்துக்களை எட்டியுள்ளனர்.

இந்தியத் தலைமையமைச்சர் நரந்திர மோடி இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலைப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசினார். பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறையில் இந்தியா பெரும் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார். கோவாவில் நடைபெறும் சந்திப்பு, பயன்மிக்க சாதனைகளைப் பெற்று, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான நட்பார்ந்த உறவை மேலும் வலுப்படுத்தி, வளரும் நாடுகள் மற்றும் புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, கோவாவில் நடைபெறும் சந்திப்பு வெற்றி பெறுவதை முன்னேற்றி, பிரிக்ஸ் நாடுகளுக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்க சீனா விரும்புவதாக யாங் சியே ச்சு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040