ஐ.நா. பொதுப் பேரவையில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 20ஆம் நாள் தலைமை தாங்கினார். இந்திய துணை வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ M. J. அக்பர், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மாய்டே மஷபானெ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரொவ், பிரேசில் வெளியுறவு அமைச்சர் ஜோசெ சேர்ரா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரிக்ஸ் நாடுகள் உலக அமைதியை உறுதியாக பேணிக்காக்க வேண்டும், உலகப் பொருளாதார வளர்ச்சியை முயற்சியுடன் முன்னேற்ற வேண்டும், வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும், உலக ஆட்சிமுறை சீர்திருத்தத்தை மேம்படுத்த வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.
இந்திய துணை வெளியுறவு அமைச்சர் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாத தாக்குதலைக் கூட்டாகக் கண்டித்து, ஒடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.