சீன மற்றும் நேபாள தொழில் நிறுவனங்கள் கூட்டாக முதலீடு செய்து நேபாளத்தின் மேற்கிலுள்ள மலை பகுதியில் கட்டியமைத்த நீர் மின் நிலையம் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
நேபாள எரியாற்றல் துறை அமைச்சர், நேபாளத்திலுள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் சீன-நேபாள ஒத்துழைப்பு சாதனையின் சாட்சியாளராக, காட்மாண்டுவில் நடைபெற்ற இந்நிலையத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நீர் மின் நிலையம், 2008ஆம் ஆண்டுக்குப் பின் நேபாளத்தில் கட்டியமைக்கப்பட்ட மிகப் பெரிய நிலையமாகும். அந்நாட்டில் சீன முதலீட்டுடன் கட்டிமுடிக்கப்பட்ட முதலாவது நிலையமும் ஆகும்.