ஐ.நாவின் 71ஆவது பொதுப் பேரவையின் பொது விவாதக் கூட்டம் 26ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நிறைவுற்றது. விவாதத்தின் போது, தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கம், அகதிகள் நெருக்கடி, சிரியா மோதல், பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி உள்ளிட்ட சூடான பிரச்சினைகள் பற்றியும், தங்களது கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகள் பற்றியும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இவ்விவாதத்தின் நிறைவுக்கு ஐ.நா. பொதுப் பேரவையின் துணைத் தலைவர் பாட்டராய் தலைவர் பீடர் தாம்சனது அறிக்கையை வாசித்தார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்களது உரையில் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை செயல்படுத்தும் மன உறுதியை வெளிப்படுத்தி, அகதிகள் மற்றும் குடியோறுவோர் பிரச்சினை, நுண்ணுயிரி தடுப்பு மருந்து எதிர்ப்புத் தன்மை ஆகியவை குறித்து அறிக்கைகளை ஏற்றுக் கொண்டு, காலநிலை மாற்றம், நிரந்தர அமைதி உள்ளிட்ட பிர்சினைகள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.