இந்தியாவுக்கான புதிய தூதராக பதவியேற்ற லுவோ ச்சாவ்ஹுய்க்கு வாழ்த்துத் தெரிவித்து, கடந்த சில ஆண்டுகளில் இந்திய-சீன உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஜெய்ஷங்கர் பாராட்டினார். சீனாவுடன் இணைந்து இருநாட்டுறவை புதிய நிலைக்கு முன்னேற்ற இந்தியா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
லுவோ ச்சாவ்ஹுய் பேசுகையில், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான இருநாட்டு ஒத்துழைப்புகளை மேம்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
கோவாவில் நடைபெற உள்ள பிரிஸ்க் நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்தும் அவர்கள் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.