அமெரிக்க பாதுகாப்பு நலனை காரணமாக கொண்டு, செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்ட முன்மொழிவை பராக் ஒபாமா 23ஆம் நாள் நிராகரித்தார். 27ஆம் நாள் அவர் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இச்சட்ட முன்மொழிவு சட்டமாக மாறினால், இதர நாடுகள் இத்தகைய சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கு காரணத்தை வழங்கக் கூடும். இதனால் அமெரிக்க இராணுவம், தூதாண்மை மற்றும் உளவு துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.