இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உரி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த பின், இந்திய-பாகிஸ்தான் உறவு மோசமாகி வருகிறது. இந்நிலையில், நவம்பர் திங்கள் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 27ஆம் நாள் முடிவு எடுத்துள்ளதாகவும், இவ்வுச்சி மாநாட்டுக்கு பாகிஸ்தான் சீரான சூழ்நிலையை உருவாக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியதாகவும் இந்திய டைம்ஸ் நாளேடு 28ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இந்தியாவின் இச்செயல், தூதாண்மை துறையில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதாகும் என்று பாகிஸ்தான் டுடே செய்தியேட்டின் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று இந்தியா அறிவித்தப் பின், வங்கதேசம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் 28ஆம் நாள் தெரிவித்ததாக இந்தியாவின் புதுதில்லி தொலைக்காட்சி நிலையத்தின் இணையதளத்தில் தகவல் வெளியானது.