உலகப் பொருளாதார எதிர்காலம் பற்றிய அறிக்கை ஒன்றை, சர்வதேச நாணய நிதியம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்தே 28ஆம் நாள் புதன்கிழமை பேசுகையில், சீனாவிலும் இந்தியாவிலும் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. பிரேசில், ரஷியா ஆகிய நாடுகளில் பொருளாதார அதிகரிப்பை மீட்கும் அறிகுறி தோன்றியுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து சீன வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் கேங் சுவான் 29ம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
பிரிக்ஸ் நாடுகள், உலக பொருளாதார அதிகரிப்பின் முக்கிய உந்து சக்தி ஆகும். அக்டோபர் திங்களில் கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில், உலகின் ஆட்சிமுறையின் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக முயற்சி மற்றும் பங்களிப்பை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.