• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கல்வித் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
  2016-10-01 14:45:42  cri எழுத்தின் அளவு:  A A A   

4வது பிரிக்ஸ் நாடுகளின் கல்வித் துறை அமைச்சர்கள் கூட்டம் செப்டம்பர் 30-ஆம் நாள் புதுதில்லியில் நடைபெற்றது. பிரிக்ஸ் அமைப்பின் 5 நாடுகளின் கல்வித் துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள்"புதுதில்லி கல்வி அறிக்கையில்"கையொப்பமிட்டனர். சீன கல்வித் துறை துணை அமைச்சர் ஹெள பிங் இக்கூட்டத்தில் உரைநிகழ்த்தினார்.

பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கல்வி துறையிலான நேர்மை மற்றும் இணக்கத்தை முன்னேற்றும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் முறை கல்வி, கல்வி தரத்தின் உத்தரவாதம், வாழ் நாள் கல்வி, உயர் கல்வி நிலையங்களது ஆய்வு சாதனைகளின் இடமாற்றம், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் இவ்வறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040