சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் கம்போடியா மற்றும் வங்காள தேசத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 8ஆவது சந்திப்பில் கலந்து கொள்வது குறித்து, சீனத் துணை வெளியுறவு அமைச்ச்ர் லீ பெள துங் 10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துக்கூறினார்.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றி அவர் பேசுகையில், இவ்வாண்டு பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புமுறை நிறுவப்பட்டதன் 10 ஆம் ஆண்டு நிறைவாகும். சீனா இவ்வமைப்புமுறைக்கு உறுதியாக ஆதரவு அளித்து இதில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகின்றது என்றார்.