முதலாவது, ஒன்றுபட்டு ஒத்துழைப்புக்கான ஆக்கப்பூர்வ சமிக்கையை வெளிப்படுத்த வேண்டும். இரண்டாவது, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒத்துழைப்பு தரத்தை உயர்த்த வேண்டும். இந்த சந்திப்பின் போது, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், நிதி மற்றும் நாணயம், மானுட பண்பாட்டியல் ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பு வாய்ப்புகளை தேட வேண்டும் என்று சீனா விரும்புகிறது. மூன்றாவது, முக்கிய பிரதேச பிரச்சினைகளில் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, கூட்டு நலன்களைப் பேணிக்காக்க வேண்டும். நான்காவது, குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று லீ பௌதொங் கூறினார்.
அனைத்தையும் உள்ளடக்கிய பயனுள்ள கூட்டு தீர்வு முறையை உருவாக்குவது என்பது நடப்பு சந்திப்பின் தலைப்பாகும்.