சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ளும் முன், சீன-வங்கதேச ஊடக கலந்துரையாடல் கூட்டம் 11ஆம் நாள் டாக்காவில் நடைபெற்றது. சீனக் கம்யூன்ஸ் கட்சி பரப்புரை துறையின் துணைத் தலைவர் துவோ ச்சென், வங்கதேச தலைமை அமைச்சரின் செய்தி ஆலோசகர் இக்பால் சோப்கன் சாவ்துரி, சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் ஹு பாங்ஷேன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய ஊடகங்களின் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வங்கதேச பயணம் வெற்றி பெற வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட இருதரப்பு பிரதிநிதிகளும் எதிர்பார்ப்பு தெரிவித்தனர். மேலும், இப்பயணத்துக்கான செய்தி அறிவிப்பு பணியை வாய்ப்பாகக் கொண்டு, செய்தி சேகரிப்பு, புதிய ஊடகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் ஹு பாங்ஷேன் பேசுகையில், சீன-வங்கதேச ஊடகங்கள் மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.