சீன அரசுத்தலைவருடன் சந்திப்புக்கு ஆர்வம்:முகர்ஜி
2016-10-13 14:04:03 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவுடனான உறவில் இந்தியா கவனம் செலுத்தி, அரசியல், பொருளாரம் மற்றும் வர்த்தகம், பண்பாடு முதலிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்க விரும்புவதாகவும், கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வருகை புரிவதை வரவேற்பதாகவும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணார் முகர்ஜி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரோ சாவ் ஹுய் வழங்கிய ஏற்பு மடலை புதன்கிழமை பெற்றுக்கொள்ளும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய