பினாம் பென் சர்வதேச விமான நிலையத்தில் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் ஆக்கப்பணி லட்சியத்தில் கம்போடியா மாபெரும் வளர்ச்சிகளைப் பெற்றுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. பிரதேச மற்றும் சர்வதேச விவகாரங்களில் கம்போடியா முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது சீனாவும் கம்போடியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும், உண்மையான நண்பர்களாகவும் விளங்குகின்றன என்று தெரிவித்தார். எனது பயணத்தில், கம்போடியத் தலைவர்களுடன் இணைந்து, இரு தரப்புறவு பற்றியும், பொது அக்கறைக் கொண்ட பிரச்சினைகள் பற்றியும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை எதிர்பார்க்கின்றேன் என்றும், இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சியை இப்பயணம் விரைவுபடுத்தி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.