சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 13-ஆம் நாள் பினாம் பென்னில் கம்போடிய தலைமையமைச்சர் ஹுன் சென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன மற்றும் கம்போடிய பாரிம்பரிய உறவுக்கு இரு தரப்பினரும் உயர்வாக பாராட்டு தெரிவித்தனர். அத்துடன், புதிய நிலைமையில், இரு நாட்டு பன்முக தொலைநோக்கு ஒத்துழைப்புக் கூட்டணியுறவு பற்றியும், பொது ஆர்வம் வாய்ந்த சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறி, ஒத்த கருத்துக்கு வந்தனர்.
தவிர, சீன மக்கள் குடியரசு மற்றும் கம்போடிய மன்னராட்சி அரசாங்கத்தின் கூட்டு அறிக்கையை இரு தரப்பினரும் வெளியிட்டனர்.