வங்கதேச பயணத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் "சீன-வங்கதேச ஒத்துழைப்பால் தங்கக் கனியைப் பெறச் செய்வோம்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, அந்நாட்டின் Daily Star மற்றும் The Daily Ittefap ஆகிய செய்தியேடுகளில் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது.
பண்டைக்காலம் தொட்டு சீனாவும் வங்கதேசமும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும் நண்பர்களாகவும் விளங்குகின்றன. பழைய பட்டுப்பாதை மற்றும் கடல்வழி பட்டுப்பாதை இருதரப்பு தொடர்புக்கு நல்ல பாலமாக அமைந்துள்ளது. மேலும், இருநாட்டு மக்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நல்ல பயன்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டத்திலும் உற்பத்தி திறன் சார் ஒத்துழைப்பிலும் சீனாவுக்கு இன்றியமையாத கூட்டாளியாக வங்கதேசம் திகழ்கிறது என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடப்பு பயணத்தின் மூலம், வங்கதேச தலைவர்களுடன் இணைந்து, இருதரப்பு ஒத்துழைப்புக்கான சிசையை உறுதிப்படுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை முன்னேற்றி, இரு நாட்டுறவை புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இக்கட்டுரையில் எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.