ஷிச்சின்பிங் பேசுகையில், வங்கதேசத்துடன் நட்புறவை வலுப்படுத்துவதற்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. வங்கதேசத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா இயன்ற அளவில் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
ஹசீனா பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் வங்கதேசம் ஆக்கமுடன் பங்கெடுக்க விரும்புகிறது. வங்கதேசம்-சீனா-இந்தியா-மியன்மார் பொருளாதார இடைவழியின் கட்டுமானத்துக்கு வங்கதேசம் ஆதரவளிக்கும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பல துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் அவர்களின் முன்னிலையில் கையொப்பமாகின. அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர்.
தவிரவும், சீன-வங்கதேச நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டுறவு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.