இந்தியாவின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரச்சினை ஆய்வகத்தின் பேராசிரியர் வரபிரசாத் எஸ்.டோல்ல பேசுகையில், உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பின்னணியில், வளரும் நாடுகள் கூட்டாக முயற்சி செய்து, பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையைத் தேடி, தீவிரமான வறுமை உள்ளிட்ட நிலைமையை ஒழிக்க உலகிற்கு உதவி செய்ய வேண்டும்.
10 ஆண்டுகளான விரைவான வளர்ச்சிக்குப் பிறகு, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு துறைகள் தொடர்ந்து விரிவாக்கப்பட்டு, ஒத்துழைப்பு அமைப்பு முறை இடைவிடாமல் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஜுலை திங்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கிய பிரிக்ஸ் நாடுகள் புதிய வளர்ச்சி வங்கி, இதுவரை பல சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு முறையின் கட்டுமானம் பற்றி, அவர் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் முதலீடுகளை வலுப்படுத்துவதைத் தவிர, மானிட பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.