• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கோவாவில் சீன-தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர்களது சந்திப்பு
  2016-10-15 21:22:12  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் ஜுமாவும் 15ஆம் நாள் சனிக்கிழமை கோவாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பல்வேறு துறைகளில் ஒன்றுக்கொன்று நன்மைகளை ஏற்படுத்தும் நட்பார்ந்த ஒத்துழைப்புகளை நடைமுறைப்படுத்தி, பயனுள்ள சாதனைகள் மூலம் இரு நாட்டு மக்களுக்கு பயன் அளிப்பதற்காக, தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து முயற்சி எடுக்க சீனா விரும்புவதாகவும், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து, ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டின் சாதனைகளை செயல்படுத்தி, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்குக் கூட்டு வெற்றியையும் கூட்டு வளர்ச்சியையும் நனவாக்க வேண்டுமென சீனா விரும்புவதாகவும், ஷி ச்சின்பிங் சந்திப்பில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040