16ஆம் நாள் காலை இது பற்றி ஜியோச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகத்தின் துணை இயக்குநர் வூ ப்பீங் இதை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், திட்டப்படி, இந்த இரண்டு விண்வெளிவீரர்கள் கோளப்பாதையில் 33 நாட்கள் தங்குவார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருந்து, உயர் பயனுள்ள முறையில் பணி புரிவதை உத்தரவாதம் செய்யும் வகையில், 4 துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
பறக்கும் கடமையின் கோரிக்கைக்குப் பொருந்தும் வகையில், சென்செள 11 விண்கலத்தில் பல தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
டியன்கோங் 2 விண்வெளி ஆய்வகம் பாதையில் இயங்குவதற்கு மனிதர் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவையை வழங்குவது, டியன்கோங் 2 விண்வெளி ஆய்வகமும், சென்சௌ 11 விண்கலமும் ஒன்றிணைவது, மனிதர்கள் கலந்து கொள்ளும் பல்வகை விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள உதவு செய்வது முதலியவை, இக்கடமையின் முக்கிய நோக்கங்களாகும்.