சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இலங்கை அரசுத் தலைவர் மைதிரிபலெ சிரிசேனாவை அக்டோபர் 16ஆம் நாள் இந்தியாவின் கோவாவில் சந்தித்துரையாடினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணிக்கான இலங்கையின் ஆதரவுகளைச் சீனா பாராட்டுகிறது. இலங்கையுடன் இந்தக் கட்டுகோப்பில் பயன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்கவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.