பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களுக்கும், பிம்ஸ்டெக் எனப்படும் பன்முக துறைகளிலான தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள வளைகுடா முன்மொழிவு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை 16ஆம் நாள் கோவாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், இலங்கை அரசுத் தலைவர், வங்கதேச தலைமை அமைச்சர், பூடான் தலைமை அமைச்சர், நேபாள தலைமை அமைச்சர், மியன்மாரின் அரசியல் கருத்துரைஞர், தாய்லாந்து அரசு பிரதிநிதி ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், பிரிக்ஸ் நாடுகளும், பிம்ஸ்டெக் நாடுகளும் வளரும் நாடுகளாகும். பல துறைகளில் பொது விருப்பத்தையும் தேவையையும் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.
தற்போது புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் சந்தையைக் கொண்ட நாடுகளும், வளரும் நாடுகளும் முன்கண்டிராத வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்குகின்றன. இந்நிலையில், நாம் கை கோர்த்து கொண்டு கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் திட்டம், பிம்ஸ்டெக் உள்ளிட்ட திட்ட வரைவுடன் இணைவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.