உலக பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கின் கட்டுக்கோப்புக்குள் இணைய வழி பயங்கரவாத ஒழிப்பு பற்றிய 2ஆவது ஆய்வுக்கூட்டம் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ துவக்க விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றினார்.
கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாத நடவடிக்கைகள் அதிக அளவில் உயர்ந்துள்ளன. இணைய இதற்கு மூலம் பரப்பப்படும் பயங்கரவாதம் முக்கிய காரணமாகும். சர்வதேச சமூகம் இணைய வழி பயங்கரவாத ஒழிப்பை பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் முக்கியமாக கொண்டு, முயற்சி எடுக்க வேண்டும் என்று வாங் யீ சுட்டிக்காட்டினார்.
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு லட்சியத்தின் முக்கிய ஆற்றலான சீனா எந்த வடிவ பயங்கரவாதத்தையும் உறுதியாக ஒடுக்கி, பயங்கரவாத எதிர்ப்பு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.