ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் 25ஆம் நாளிரவு ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஸ்டேயின்மெருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். சிரியா நிலைமை பற்றியும், சிரியா நெருக்கடியைத் தீர்ப்பது பற்றியும் இரு தரப்பினரும் முக்கியமாக விவாதித்தனர்.
சிரியாவின் வடபகுதியில் உள்ள அலெப்போ நகரின் நிலைமையைத் தணிவுபடுத்த வேண்டும் என்ற முன்மொழிவை சிரியா அரசு ஆதரிப்பதுடன், அந்நகரின் மனித நேய உதவி நிலைமை பேணிகாக்கப்பட வேண்டும் என இவ்விரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்துவதாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத் தளம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சிரியா நெருக்கடியைச் சமரசம் செய்வது குறித்து உருவாக்கப்பட்ட நிபுணர்கள் கலந்தாய்வு அமைப்பு முறையை இரு நாட்டுத் தூதாண்மை வாரியங்கள் நிலைநிறுத்த வேண்டும் என்பதை இவ்விரு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.