சீன தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழு இலங்கை பயணத்தை முடித்த பின், 4ஆம் நாள் மியன்மாருக்கு சென்றடைந்து, நட்புப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள தொடங்கியது.
திபெத் பொருளாதாரம் விரைவாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது. மக்கள் வாழ்க்கை தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. உயிரினச்சுற்றுச்சூழல் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்று பிரதிநிதிக் குழுவின் தலைவரும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணை தலைவருமான பென்பாடாசி கூறினார்.