டாக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து காசிபூருக்குச் செல்லும் வெகுவிரைவு பேருந்து இடைவழி திட்டப்பணிக்கு சீனாவின் கெச்சோபா குழுமம் பொறுப்பேற்கும். வங்கதேச போக்குவரத்து துறை அமைச்சர், கெச்சோபா குழுமத்தைச் சேர்ந்த 6ஆவது திட்டப்பணி நிறுவனத்தின் பொது மேலாளர் யான் ரூஷெங் ஆகியோர் டிசம்பர் முதல் நாள் இத்திட்டப்பணிக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
யான் ரூஷெங் பேசுகையில், வங்கதேசத்தில் கட்டப்படும் முதலாவது வெகுவிரைவு பேருந்து இடைவழி அமைப்பு, டாக்கா விமான நிலையத்திலிருந்து காசிபூருக்கு செல்லும் சாலையின் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்தும் அதேவேளை, டாக்காவின் இதரப் இடங்களுக்கும் டாக்காவின் வட பகுதிக்கும் இடையேயான பொருளாதாரத் தொடர்பையும் முன்னேற்றும். முழு டாக்காவின் போக்குவரத்து நிலையை மேம்படுத்துவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.