ஈரான் மீதான தடையாணை பற்றிய மசோதாவை பத்து ஆண்டுகள் நீட்டிக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்க செனெட் அவை கடந்த 1ம் தேதி ஏற்றுக்கொண்டதற்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் ச்சாரிப் 3ஆம் நாள் கண்டனம் தெரிவித்தார். இச்செயல், அமெரிக்காவின் சர்வதேச புகழைப் பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அன்று இந்தியத் தலைநகர் புது தில்லியில் அவர் இதைத் தெரிவித்தார். ஈரான் அணு ஆயுத உடன்படிக்கையில் இடம்பெறும் அம்சங்களை அமெரிக்க அரசு கடைபிடித்து, ஈரான் மீதான தடை நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக ஈரானின் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா இம்மசோதாவை அங்கீகரித்தாலும், ஈரானுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், ஆனால் சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் புகழ் குறையும் என்றும் ச்சாரிப் சுட்டிக்காட்டினார்.