• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உச்சி மாநாடு
  2017-01-15 19:18:13  cri எழுத்தின் அளவு:  A A A   
பயங்கரவாத அச்சுறுத்தல் பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்றது. அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் தங்களுக்குரிய கடமைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் பிரான்சுவா ஒலோந்தே மாலி நாட்டின் தலைநகர் பாமாகோவில் தெரிவித்தார்.
27வது பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உச்சி மாநாடு 14-ஆம் நாள் பாமாகோவில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிரான்ஸ் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆதரவு அளிப்பது என்பது, தனது உள்நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதம் அளிக்கும் செயலாகும் என்று ஒலோந்தே குறிப்பிட்டார்.
பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர் பேசுகையில், ஆப்பிரிக்கா எங்களுக்குடைய எதிர்காலமாகும். ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரம் அதிகரித்தால், ஐரோப்பாவும் பிரான்ஸும் நலன்களையும் பெறும் என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040