பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால், நீண்டகாலத்திற்கு பிரிட்டனின் உற்பத்தி அளவு குறையும் என்றும், இது பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளியலாளர் மெளரிஸ் ஓப்ஸ்ட்ஃபேல்த் 16ஆம் நாள் தெரிவித்தார்.
அன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், தற்போது வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான திட்டம், உறுதியற்ற தன்மை உடைய நிலையில் உள்ளது. விரைவு தீர்வு திட்டத்தை பிரிட்டன் வெளியிட்டால், உறுதியற்ற தன்மையைக் குறைப்பதற்குத் துணை புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் பொருளாதாரம், பெரிய அளவில் ஐரோப்பிய ஒன்றியச் சந்தையுடன் ஒன்றிணைந்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது, பிரிட்டனின் பொருளாதாரம், வர்த்தகம் முதலியவற்றுக்கு சீர்குலைப்பை ஏற்படுத்தும். உழைப்பாளர்கள் பிரிட்டனில் நுழைவதற்கு பிரிட்டன் அரசு தடை விதித்தால், அது பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிகரித்து வரும் உழைப்பாளர்கள், பிரிட்டன் பொருளாதார அதிகரிப்புக்கான இயக்கு ஆற்றல்களில் ஒன்றாகும் என்று அவர் வலியுறுத்தினார்.