ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீனப் புத்தாண்டு வசந்த விழாக் கொண்டாட்டம் ஜனவரி 29ஆம் நாள் பிரிட்டனின் இலண்டனிலுள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கொண்டாட்டம், ஆசியாவை நீங்கலாக, மிக பெரிய அளவில் நடைபெறும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அன்று இக்கொண்டாட்டத்துக்கு செய்தியை அனுப்பி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மேவும் இந்நிகழ்த்திக்காக வாழ்த்துரை வழங்கியுள்ளார்.