குடும்பத்தினருடன் சேர்ந்து சீனப் புத்தாண்டு வசந்த விழாவை கொண்டாடுவது பழைய வழக்கம். அண்மையில், 500க்கும் அதிகமோனர் ஒன்றாகக் கூடி எடுக்கப்பட்டுள்ள குடும்பப் புகைப்படம், சீன இணையதளங்களில் பரபரப்பை பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.ட
சீனாவின் செஜியங் மாநிலத்தின் செங்சோ மாவட்டம், ஸிசெ கிராமத்தில், ரென் என்ற குடும்ப பெயர் கொண்ட குடும்பத்தின் 7 தலைமுறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த ஊரில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த பெரிய அளவிலான புகைப்படம் எடுக்க, ஆளில்லா சிறிய ரக பறக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.