• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பங்குப் பத்திரச் சந்தையில் நுழைந்த திபெத் நிறுவனங்கள்
  2017-02-13 16:54:25  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த சில ஆண்டுகளாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிறுவனங்கள் மூலதனச் சந்தையைப் பயன்படுத்தி பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. 2016ஆம் ஆண்டின் இறுதிவரை, பங்குப் பத்திரச் சந்தையில் காலடி எடுத்து வைத்த திபெத் நிறுவனங்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 15 ஆயிரத்து 284 கோடியே 80 லட்சம் யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பை விட இது மிகவும் அதிகம். மேலும், தேசிய அளவில் திபெத் நிறுவனங்களின் பங்குப் பத்திர மயமாக்கல் விகிதம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது பங்குப் பத்திரச் சந்தையில் பதிவு செய்துள்ள 14 திபெத் நிறுவனங்கள் உணவு மற்றும் பானங்கள் உற்பத்தி, சுற்றுலா, மருந்து தயாரிப்பு, கனிம அகழ்வு, கட்டிடப் பொருட்கள், திபெத் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தன. எதிர்வரும் சில ஆண்டுகளில் திபெத் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன், உடல் நலத்துடன் தொடர்புடைய மாசற்ற தொழிலிலும், நீர் மின் எரியாற்றல் துறையிலும் அதிகமான நிறுவனங்கள் பங்குப் பத்திரச் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040