சீனப் பொருளாதாரத்தின் இடைக்கால மற்றும் நீண்டகால வளர்ச்சி எதிர்காலம் தொடர்பாக, சர்வதேச நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி பிப்ரவரி 14ஆம் நாள் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏன் சீனா மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றோம் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், சீனப் பொருளாதார வளர்ச்சியின் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தில் படைக்கப்பட்டுள்ள சாதனைகள் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன.
மேலும் இவ்வறிக்கையில, சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி முன்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று, சீனாவில் அமைப்புமுறை ரீதியான நிதி இடர்பாடு ஏற்பட சாத்தியம் குறைவு. இரண்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வருமானம் ஈட்டும் நாடுகளின் வரிசையில் சீனா நுழைவது, மூன்று, சீனப் பங்குச் சந்தையில் சிறந்த சாதனை பெறுவது ஆகிய எதிர்பார்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.