சிரியா பிரச்சினை பற்றி ஜெனிவாவில் நடைபெறும் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை 24ஆம் நாள் இரண்டாம் நாளில் நுழைந்தது. சிரியா பிரச்சினைக்கான ஐ.நா தலைமைச் செயலாளரின் சிறப்புத் தூதர் ஸ்டாஃபன் தே மிஸ்துரா அன்று சிரியா அரசு மற்றும் அரசு எதிர்ப்புப் பிரதிநிதிகளுடன் முறையே பேச்சுவார்த்தை நடத்தி, நடப்புப் பேச்சுவார்த்தையை பயன்தரும் முறையில் முன்னேற்றுவது பற்றி எழுத்து மூல ஆலோசனையை வழங்கினார்.
இது குறித்து, சிரியா பிரச்சினைக்கான ஐ.நா சிறப்புத் தூதரின் அலுவலகத்தின் பொறுப்பாளர் மெகல் கோன்டேட் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில், மிஸ்துரா அன்று சிரியா அரசு மற்றும் அரசு எதிர்ப்பு பிரதிநிதிகளுடன் ஆழமான, ஆக்கப்பூர்வ பரிமாற்றம் மேற்கொண்டுள்ளார் என்றும், ஐ.நா பாதுகாப்பவையின் 2254ஆவது தீர்மானத்துக்கிணங்க பேச்சுவார்த்தையை முன்னேற்றுவது பற்றி மிஸ்துரா அவற்றுடன் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் தொடர்புடைய பேச்சுவார்த்தையை மிஸ்துரா தொடர்ந்து நடத்தி, கருத்துக்களைப் பரந்துபட்ட அளவில் கேட்டறிவார் என்றும் மெகல் கோன்டேட் தெரிவித்தார்.