மத்திய சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இரண்டு பாதுகாப்பு வாரியங்கள் 25ஆம் நாள் தொடர் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலுக்குள்ளாயின. இத்தாக்குதலில் அப்பாவி மக்களும், ராணுவப் படையினருமாக 50 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 24 பேர் காயமுற்றனர். ஜப்ஹாத் ஃபதாஹ் அல் ஷாம் எனும் அதி தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
இத்தாக்குதல் குறித்து ஹோம்ஸ் மாநிலத் தலைவர் தாலால் பராஸ் உள்ளூர் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், ஹோம்ஸ் பிரதேசத்தில் அரசுப் படை ராணுவம் முன்னேற்றமடைந்ததற்கும், அரசு பிரதிநிதிக்குழு ஜெனிவாவில் அரசியல் வெற்றியைப் பெற்றதற்காக பழிவாங்கும் வகையிலும், பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.