• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் இந்திய செய்தி ஊடகங்களின் கவனம்
  2017-03-05 10:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் 5ஆவது கூட்டத்தொடரும், சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத்தொடரும், அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இது, இந்திய செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டிடே, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் முதலிய செய்தி ஊடகங்கள், இவ்வாண்டு சீனாவின் இராணுவ நிதி ஒதுக்கீட்டின் அதிகரிப்பு மீது அதிகமான கவனம் செலுத்தியுள்ளன. 2017ஆம் ஆண்டு சீனாவின் இராணுவ நிதி ஒதுக்கீடு 7 விழுக்காடாக அதிகரிக்கப்படும். இது, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த அந்நாட்டுத் தேசிய பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு 10 விழுக்காடு என்பதிலிருந்து, தெளிவாக மாறுபடுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு இரு கூட்டத்தொடர்களின் கண்ணோட்டமும், பொருளாதாரத் துறையின் மீது தான் உள்ளது. சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் வழங்கிய அரசு பணியறிக்கையில், 2016ஆம் ஆண்டு சீன பொருளாதார அதிகரிப்பு வேகத்தை அறிவித்ததோடு, 2017ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சித் திட்டத்தையும் வெளிக்காட்டியுள்ளது. இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியில் அறிவித்ததாக டி ஹிந்துஸ்தன் டைம்ஸ், சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் பொருளாதாரத்தில் முக்கியமாக கவனம் செலுத்தும் என்னும் கட்டுரையில் கூறியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040