• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காழ்ப்புணர்ச்சி வேண்டாம்; ஒத்துழைப்புதான் வேண்டும் – சீனா
  2017-03-10 16:37:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் இரு கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறிய கருத்துக்களில் "இணைந்து பணியாற்றுவதுதான் பரஸ்பர வெற்றிக்கு வித்தாகும்" என்ற கருத்தை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தினார்.

உதாரணத்துக்கு, நாடுகளிடையேயான பரிமாற்றம் மற்றும் பயன்கள் ஆகியவற்றுக்காக ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனாவின் விருப்பம்; சர்வதேச அமைதி, நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பதென்ற சீனாவின் முடிவு; கொரிய தீபகற்பத்தில் சுமூக நிலைக்கான தீர்வுகள் என பல கருத்தை வாங் யி குறிப்பிட்டார்.

உலகமயமாக்கலின் சூழலில் தற்போதைய நிலைமை உள்ளது. ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வொரு நாடும் பல நாடுகளைச் சார்ந்துதான் தங்களது பொருளாதார நகர்வுக்கான திட்டத்தை வகுக்கின்றன. நாடுகளிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைதான் நிரந்தரத் தீர்வு என்பது கடந்த கால சம்பவங்களும், நிகழ்கால சம்பவங்களும் உணர்த்தி வருகின்றன. சமீபத்தில், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பிலிப்பைன்ஸ் ஆமோதித்தது.

ஆகவே, சீனாவின் முந்தைய செயல்பாடுகள் மற்றும் வாங் யியின் சமீபத்திய கூற்றுகள், மறைமுகமாக இந்திய-அமெரிக்க நிபுணர்களுக்குக் கூறுவது என்னவென்றால் 'நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். நம்மிடையே காழ்ப்புணர்ச்சி கூடாது, ஒருவரையொருவர் அரவணைத்து முன்னேறுவோம் என்பதுதான்.'

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040