தொடர்ச்சியான குளிர் காற்றோட்டத்தின் பாதிப்பால், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகட்சே, அலி, லொக்கா உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி பெய்து வந்தது. இந்நிலையில், சீன-நேபாள நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன. சீன ஆயுதகாவற்துறையினர்கள், இச்சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.