சீன-நேபாள நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட பகுதி சீரமைப்பு
2017-03-15 08:55:53 cri எழுத்தின் அளவு: A A A
சீன-நேபாள நெடுஞ்சாலையில் திபெத்தின் நியெலாமு மாவட்டத்திலிருந்து ச்சாங்மு வட்டத்துக்குச் செல்லும் ஒரு பகுதியின் போக்குவரத்து சேவை, கடந்த சில நாட்களில் தொடர்ந்த பனிப் பொழிவின் காரணமாகத் துண்டிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி செயலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சீனக் காவல்துறையினர்கள் 50க்கும் அதிகமான மணிநேரம் சீரமைப்புப் பணி மேற்கொண்டனர். அதன் பிறகு 14ஆம் நாள் மாலை 5 மணிக்கு 18 கிலோமீட்டர் நீளமுடைய இந்தப் பகுதி, போக்குவரத்துக்கு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய