• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய இருப்புப்பாதை ஒத்துழைப்பு
  2017-03-17 09:33:54  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ஸாவ்ஹுய், இந்திய இருப்புப்பாதைத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை வியாழக்கிழமை சந்தித்துரையாடினார். சீன-இந்திய இருப்புப்பாதை ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி பற்றி, இருவரும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சீன இருப்புப் பாதையின் வளர்ச்சி பற்றி லுவோ ஸாவ்ஹுய் எடுத்துக்கூறினார். இரு நாடுகளும் பயன்தரும் முறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றிடம் இல்லாததை மற்றொன்று பெற்றுக் கொண்டு, கூட்டு வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இருப்புப் பாதைக்கான இரு தரப்பு ஒத்துழைப்பு அமைப்பு முறையை உருவாக்கி, இதற்கான ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று சுரேஷ் பிரபு முன்மொழிவு தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040