• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் - டிரம்ப் அரசு
  2017-03-17 09:35:21  cri எழுத்தின் அளவு:  A A A   

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 2018 நிதி ஆண்டிற்கான வரவுச் செலவு பணித்திட்ட அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை 16ஆம் நாள் வெளியிட்டது. தேசிய பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் 5400 கோடி அமெரிக்க டாலர் அதிகரிப்பதோடு, வெளியுறவு அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம், வேளாண் அமைச்சகம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு சாரா துறைகளின் செலவைக் குறைக்க வேண்டும் என்ற கருத்து இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் பேசுகையில், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காத நிலையில், அமெரிக்காவின் இராணுவ ஆற்றலை மறுசீரமைப்பது இந்த பணித்திடத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார். (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040