கடந்த திங்கள்கிழமை, ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கி முனையில் அலுரா துறைமுக நகரில் இருந்த சிறிய எண்ணெய் கப்பல் ஒன்றைக் கடத்தினர். அவர்கள், சோமாலிய கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கப்பலையும், அதன் ஊழியர்களையும் விடுவிக்க, பணயத்தொகையை அவர்கள் கேட்டுள்ளனர் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கடல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்ட ஊழியர்களை மீட்கும் பொருட்டு, எத்தியோப்பியாவுக்கான இலங்கைத் தூதர், சோமாலியா அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும், இது கடற்கொள்ளை தொடர்பானது என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமரவீரா தெரிவித்தார்