அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் மார்ச் 17-ஆம் நாள் பேசுகையில், நேட்டோ அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் தேசிய பாதுகாப்பு செலவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்ததோடு, நியாய வர்த்தகத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தவிர, அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்ஜெலா மெர்கெல் அம்மையார், டொனல்ட் டிரம்பைச் சந்தித்த பின் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் மெர்கெல் அம்மையார் பேசுகையில், 2016-ஆம் ஆண்டில் ஜெர்மனி தேசியப் பாதுகாப்பு செலவை 8விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார். மேலும், 2024ஆம் ஆண்டுக்குள், ஜெர்மனியின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 விழுக்காடாக இச்செலவு இருக்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.